உள்ளூர் செய்திகள்

மாடுகள் 2-வது முறையாக பூட்டை உடைத்து விடுவிப்பு

Published On 2022-12-04 06:12 GMT   |   Update On 2022-12-04 08:13 GMT
  • மாடுகள் 2-வது முறையாக பூட்டை உடைத்து விடுவிக்கப்பட்டன.
  • நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கால்நடைகள் வளர்ப்பதை முறைப்படுத்த முன்வராத அதிகாரிகளால் இப்பிரச்சினைகள் தொடர்கிறது.

தடையற்ற போக்கு வரத்திற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் விதிகள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளன. அதன்படி ரோட்டில் கால்நடைகள் திரியவிடாமல் அதற்கான பட்டிகள் மற்றும் கொட்டகை களில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். கேட்பாரற்று திரியும் மாடுகள் மெயின் ரோட்டின் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நிலத்தின் மதிப்பு கூடியதால் கால் நடைகளுக்கு என்று ஒதுக்க ப்பட்டிருந்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன. அரசு சார்பில் இலவச கறவை மாடுகள், ஆடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றை இடப்பற்றாக்குறை மற்றும் தீவன செலவுகளை கணக்கிட்டு வெளியே மேய விடுகின்றனர்.

பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்து வருகின்றனர்.அதன்பின் ரோட்டில் விட்டு விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை, இரவில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மாடுகள் ரோட்டினை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அடிக்கும் 'ஹாரன்' சத்தத்தில் மிரண்டு ஓடுகின்றன. இதனால் டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள்விபத்துக்குள்ளாகின்றனர்.

ஒரு சில மாடுகள் அப்படியே நின்று போக்குவரத்திற்கு இடை யூறினை ஏற்படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சில மாடுகள் நிரந்தர தங்கும் இடமாக மாற்றியுள்ளது. இவை திடீரென குறுக்கே கடந்து உயிர்பலியை ஏற்ப டுத்துவதுடன் அவற்றிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து கீழக்கரை நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் சேக் உசேன் கூறியதாவது:-

சட்டவிதிகளை பின்பற்றாமல் கால்நடைகளை ரோடுகளில் விடும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கீழக்கரை நகராட்சி தூய்மை பணியா ளர்கள் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அடைத்தனர். கேட்டின் பூட்டை உடை த்து அடைக்கப்பட்ட மாடுகளை 2 முறை விடுவித்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News