உள்ளூர் செய்திகள்

பலசரக்கு வியாபாரி அடித்துக்கொலை

Published On 2022-07-28 07:54 GMT   |   Update On 2022-07-28 07:54 GMT
  • பலசரக்கு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
  • கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு முஸ்லிம் தெருவை சேர்ந்த வர் நசீர் அலி (வயது 55). இவர் அதே பகுதி யில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜாரியா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெரியபட்டினத்தில் தனக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை நசீர்அலி ரூ.27 லட்சத்துக்கு சஹாரூல் ஜமால் என்பவருக்கு விற்றார். இதில் பெரியபட்டினம் பண்ணக்கரையை சேர்ந்த செய்யதுஇபுராகிம் என்ப வர் தரகராக செயல்பட்டு நிலத்தை விற்று கொடுத்த தாக தெரிகிறது.

ஆனால் நிலம் விற்ற பணத்தில் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம்மட்டுமே நசீர் அலியிடம் கொடுக்கப்ப ட்டது. மீதமுள்ள ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்படவில்லை.

நசீர்அலி நிலம் விற்ற மீதி பணத்தை தருமாறு செய்யது இபுராகிமிடம் அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை நசீர்அலி தொழு கையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யது இபுராகிம் அவரி டம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

ஆத்திரம் அடைந்த அவர், நசீர் அலியை சரமாரி யாக தாக்கி தள்ளி விட்ட தாக தெரிகிறது. இதில் அவர் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியலில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியபட்டினம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நசீர்அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராமநாதபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

Tags:    

Similar News