உள்ளூர் செய்திகள்

முத்துச்சாமிபுரத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம்

Published On 2023-01-05 07:54 GMT   |   Update On 2023-01-05 07:54 GMT
  • ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்திற்கான பூமிபூஜை நடந்தது.
  • அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

கீழக்கரை

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத் தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் இந்தப்பகுதி மக்கள் சமுதாயக் கூடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்த னர்.அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அதன்படி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாத புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது.

இதில் கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அஹமது, மாணவர் அணி நகர் அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகராட்சி பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்ப சிவம், நகர் மன்ற கவுன் சிலர்கள் முகமது ஹாஜா சுகைபு, நசுருதீன், மீரான் அலி, பயாஸ், காயத்ரி உள்பட கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள், வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News