உள்ளூர் செய்திகள்

வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முருகேசன் எம்.எல்.ஏ. பணி ஆணைகளை வழங்கினார்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 90 பேர் தேர்வு

Published On 2022-12-08 07:45 GMT   |   Update On 2022-12-08 09:22 GMT
  • பரமக்குடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 90 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்களுக்கு பணி ஆணைகளை முருகேசன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பரமக்குடி

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குடிசை இல்லா வீடுகளை உருவாக்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், மானியத்துடன் சுயமாக வீடு கட்டுவதற்கு 36 வார்டுகளில் 96 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் முதல் கட்டமாக 9 பேருக்கு முதல் தவணை நிதி வழங்கப்பட்டது. இதனை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 4 தவணைகளாக மானிய தொகை வழங்கப்படும்.

இந்த நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி. அருளானந்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் கேர்லின் ரீட்டா, நகர துணைச்செயலாளர் மும்மூர்த்தி, கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அப்துல் மாலிக், பிரபா சாலமன், தனலட்சுமி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News