உள்ளூர் செய்திகள்
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக மேட்டூர், ஓமலூரில் நேற்று சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் , நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 9.8.மி.மீ. மழை பெய்தது. ஓ மலூர் 8.4, சங்ககிரி 4.2, எடப்பாடி 2.4, சேலம் 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 24.9 மி.மீ. மழை பெய்துள்ளது.