உள்ளூர் செய்திகள்

கரியகோவில், மேட்டூரில் மழை

Published On 2022-07-28 07:14 GMT   |   Update On 2022-07-28 07:14 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது.

குறிப்பாக கரியகோவில், மேட்டூர் பகுதியில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக கரியகோவிலில் 11 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 8 , ஆனைமடுவு 5, ஆத்தூர் 4.8, ஏற்காடு 4.4. மி.மீ. என மாவட்டம் முழுவதும் 33.20 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது .  

Tags:    

Similar News