தெருநாய்களை பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்.
திண்டுக்கல்லில் தெருக்களில் சுற்றி திரிந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
- திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது.
- திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நாய் கடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். மேலும் கவுன்சிலர்களும் நாய்கள் தொல்லை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.