உள்ளூர் செய்திகள்

நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published On 2022-09-29 08:21 GMT   |   Update On 2022-09-29 08:21 GMT
  • நூற்றுக்கும் மேலான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
  • மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்.

மன்னார்குடி:

மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையும், மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து லூயிஸ் பாய்ச்சர் என்ற விஞ்ஞானி பிறந்த தினத்தில் (தடுப்பூசியை கண்டுபிடித்தவர்) வெறி நோய் தடுப்பூசி முகாமை நடத்தினர்.

இதில் 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை முகாம்களுக்கான மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்.

மொத்தம் 113-க்கும் மேலான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் டாக்டர் டி. ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில் உதவி இயக்குனர் டாக்டர் சி. மும்மூர்த்தி, மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி. ரெங்கையன், செயலர் வி. கோபாலகிருஷ்ணன், பொருளர் டி. அன்பழகன், டாக்டர்கள் கார்த்திக், ராகவி, ஆய்வாளர் சின்னக்காளை, உதவியாளர்கள் இ. நடராஜன், வி. பாரதி மோகன், ஆர். கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News