உள்ளூர் செய்திகள்

புளியங்குடி டி.எஸ்.பி. அசோக்.

புளியங்குடியில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

Published On 2022-07-29 08:51 GMT   |   Update On 2022-07-29 08:51 GMT
  • புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
  • புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய டி.எஸ்.பி.யாக குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த அசோக் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். இவரது மனைவி தனுஷியா தென்காசியில் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணி புரிகிறார்.

புதிதாக பொறுப்பேற்று கொண்ட டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News