அறந்தாங்கி,
பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
யூத் ரெட்கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதனை அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் குழுவினர் இரத்த யூனிட்களை பெற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் தயாநிதி, கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கணேஷ்குமார், தமிழ் துறை தலைவர் காளிதாஸ் உள்பட பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.