உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் பெண் தற்கொலை

Published On 2022-12-22 12:06 IST   |   Update On 2022-12-22 12:06:00 IST
  • உடல் நிலை சரியாகவில்லை என்ற மன உளைச்சல்
  • அரசு மருத்துவமனையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி அம்சவள்ளி (வயது52). இவர் உடல் நலக்குறைவுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக ேசர்ந்தார். 3-வது தளத்தில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்சவள்ளி, அங்குள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நிலை சரியாகவில்லை என்ற மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News