உள்ளூர் செய்திகள்

133 மாணவ, மாணவியர்கள் சேர்ந்து 1330 குறள்கள் எழுதும் நிகழ்ச்சி

Published On 2022-06-25 07:07 GMT   |   Update On 2022-06-25 07:07 GMT
  • 133 மாணவ, மாணவியர்கள் சேர்ந்து 1330 குறள்கள் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தமிழ் வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவண–த்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் ஒரே நேரத்தில் 133 மாணவ, மாணவியர்கள் சேர்ந்து 1330 குறள்கள் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2022-23ம் கல்வி ஆண்டை தமிழோடுவரவே–ற்கும் விதமாக குறள் தொடுப்போம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மொழியின் முக்கிய–த்துவம் குறித்தும், திருக்குறள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்த நிகழ்ச்சியில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு மாணவருக்குஒரு அதிகாரம் வீதம் திருக்குற–ளில் உள்ள 1330 பாடல்களை 133 மாணவ மாணவிகள் சேர்ந்து 3 நிமிடத்தில் எழுதி முடித்தனர். மாணவ மாணவியர்கள் எழுதிய திருக்குறள்களை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கலை–ச்செல்வி, ஆங்கிலபட்ட–தாரி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News