உள்ளூர் செய்திகள்
- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தார்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்தி விடுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராஜ்குமார் (வயது 24) இவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரது தந்தை உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். வயிற்று வலியும், தந்தை இறந்த சோகமும் இவரால் தாங்கமுடியாமல் மனவிரக்தியில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்பை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.