உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

Published On 2023-01-09 12:15 IST   |   Update On 2023-01-09 12:15:00 IST
  • தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
  • கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே குப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. இவருக்கு சொந்தமாக சுமார் 20 அடி ஆழம் ெகாண்ட, கிணறு உள்ளது. கிணற்றின் அருகில் ஒரு பசுமாடு மேய்ந்த போது கால் தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் மீட்பு குழுவி னருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News