உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

Published On 2022-12-01 14:01 IST   |   Update On 2022-12-01 14:01:00 IST
  • கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
  • மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் பகுதியில் வசிப்பவர் ஜோதிவேல். இவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லா கிணற்றில், அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு விழுந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர், கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News