உள்ளூர் செய்திகள்

இலுப்பூர் அருகே ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் அச்சமடைந்த பொதுமக்கள்

Published On 2023-02-15 12:48 IST   |   Update On 2023-02-15 12:48:00 IST
  • இலுப்பூர் அருகே ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
  • மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள்ளிட்டோர் அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்று பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வெட்டுக்காடு ஊராட்சி போலம்பட்டியில் ேரஷன் கடை செயல்பட்டு வருகிறது. போலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ரேஷன் கடையில் நேற்று இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பொதுமக்கள் வாங்கிச் சென்று பார்த்த–போது அரிசியில் மற்றொரு அரிசியைபோல் ஏதோ பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து ரேஷன் கடையில் வாங்கிய அரி–சியை மீண்டும் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கொண்டு காண்பித்து இது–குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஊழியர் இது–குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள் ளிட்டோர் விரைந்து வந்து அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப் பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், இது பள்ளிகளுக்கு வழங்கப்ப–டுபவை என்றும் பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர். இதனால் நிம்மதியடைந்த பொது–மக்கள் அந்த அரிசியை பெற்றுச்சென்றனர்.


Tags:    

Similar News