உள்ளூர் செய்திகள்

குடிநீர் பிரச்சனைக்கு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு - அமைச்சர் நேரு நம்பிக்கை

Published On 2022-06-25 06:58 GMT   |   Update On 2022-06-25 06:58 GMT
  • குடிநீர் பிரச்சனைக்கு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
  • பணிகள் நடைபெற்றவருகிறது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமானின் திருஉருவ சிலைக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துைற அமைச்சர் கே.என்.நேரு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழகத்தில் பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அரசு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவது தெரிகிறது. இருந்த போதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையில் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும். இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதுக்கோட்டையில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 122 ேகாடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்றவருகிறது. புதுக்கோட்டை நகரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 690 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News