உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் முதியவர் பலி

Published On 2022-12-19 09:39 GMT   |   Update On 2022-12-19 10:02 GMT
  • வாகன விபத்தில் முதியவர் பலியானார்
  • இரு சக்கர வாகனத்தில் வந்த போது சம்பவம்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் சிட்டகாடு பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இரு சக்கர வாகனத்தில் திருவரங்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையை நோக்கி சென்ற டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடேசன் பலத்த காயங்களுடன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா நந்தினி (பொ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் சென்று உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News