உள்ளூர் செய்திகள்

புனித அதிசய மாதா ஆலய தேர்பவனி

Published On 2022-08-21 11:52 IST   |   Update On 2022-08-21 11:52:00 IST
  • புனித அதிசய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
  • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசியமாதா ஆலய தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிநாயகம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

18, 19, 20 ஆகிய தேதிகளில் கோட்டைக்காடு எம்.எம்.ஐ. பங்குத்தந்தை செங்கோல் மேலப்பட்டி ஐயங்காடு மற்றும் வம்பன் காலனி மற்றும் ஆவுடையார்கோயில் உதவி பங்குத்தந்தை பிராங்கோ எடின், குளவாய்ப்பட்டி வாழைக்கொள்ளை மற்றும் வண்ணாச்சிக்கொள்ளை, மற்றும் வேளாங்கண்ணி பங்குத்தந்தை அற்புதராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறை மக்களுக்காக திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.

இன்று 21-ந்தேதி சிறுவர், சிறுமிகளுக்கான திவ்ய நற்கூருணை (புது நன்மை) விழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் நவ நாட்களில் பங்கு மக்கள் குடும்பத்தோடு அனைத்து திருப்பலி நிகழ்ச்சிகளிலும் திரளாக கலந்துகொண்டனர்.

தேர் பவனி நிகழ்ச்சியில் தேவமாக திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆர்கே அடிகளார் தலைமையில் சித்தேரிமுத்து முன்னிலையில் ஆலங்குடி நகர மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து உள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலய தேவமாதா புகழ் பாடிக்கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தேர் பவனி ஆலங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

விழாவில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் ஒன் றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பங்கு பணியாளர்கள், அருட்சகோதரிகள் பக்தசேவைக் குழுக்கள் அன்னதான குழு மற்றும் இளையோர் இயக்கம் ஆகியோர்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News