உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்த பெண் மாயம்

Published On 2022-11-23 15:02 IST   |   Update On 2022-11-23 15:02:00 IST
  • வீட்டில் இருந்த பெண் மாயமானார்
  • விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளையைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் தனலட்சுமி (வயது19). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி விடுமுறைக்கு திருப்பூரில் சொந்த ஊருக்கு வந்த தனலட்சுமி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News