உள்ளூர் செய்திகள்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- புதுக்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நரிமேட்டை சேர்ந்தவர் நிவேதா (வயது 27). இவர் சென்னையில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று புதுக்கோட்டைக்கு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.