- புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- 75 இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை,
விநாயகர் சதுர்த்தியையெட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதுடன், சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்து உள்ளது.
இந்தாண்டு புதுக்கோட்டை மாவடடத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதில் 79 இடங்களில் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மேலும் கடந்த காலங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்ன் போது சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களை ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் திருவப்பூர், கலெக்டர் அலுவலகம் அருகில், அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலை, பழைய பேருந்து நிலையம், கிழக்கு ராஜவீதி, திலகர் திடல், பழனியப்பா கார்னர், மச்சுவாடி, பியு சின்னப்பா பூங்கா உள்பட 75 இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிலைகள் அனைத்தும் விநாயகர் சதுர்த்தியில் இருந்து ஒரு வாரத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.