போலி கையெழுத்து போட்டு ரூ.11 லட்சம் மோசடி - சுகாதார நிலைய உதவி கணக்காளர் கைது
- சுகன்யா தேசிய ஊரக சுகாதார தூய்மை இயக்கத்தில் பணிபுரிபவர்களின் சம்பள பணம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909 பணத்தை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கையொப்பத்தை காசோலையில் போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்துள்ளார்.
- மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதவி கணக்காளர் சுகன்யா மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துப்பட்டியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக பணி புரிபவர் புதுக்கோட்டை மேல 3-ம் வீதியை சேர்ந்த கண்ணன் மனைவி சுகன்யா (வயது 34).
இவர் கடந்த 21.3.22 முதல் 16.8.22-க்கு இடைப்பட்ட நாட்களில் தேசிய ஊரக சுகாதார தூய்மை இயக்கத்தில் பணிபுரிபவர்களின் சம்பள பணம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909 பணத்தை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கையொப்பத்தை காசோலையில் போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதவி கணக்காளர் சுகன்யா மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.