ஆலங்குடியில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றம்
- ஆலங்குடியில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல் குடி வருவாய்க்கு உட்பட்ட குருந்தடிமனை குக்கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த வரத்துவாரி புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குப்பைகளைக் கொட்டி வைத்திருந்தார். மேலும் அந்த பகுதியினர் அரசு இடத்தின் வழியாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் ஆக்கிரமித்திருப்பதாக ஆலங்குடி த ாசில்தாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் செந்தில்நாயகி, வெண்ணவால்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் உதவியாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் குப்பையை அகற்றிவிடுமா று தனிநபரை எச்சரித்து விட்டு வந்தனர்.
ஆனால், அந்த தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் குப்பைகளை அகற்ற முன்வராததால், நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய் து றையினர் ஆலங்குடி போலீசாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிக்கப்ப ட்ட புறம்போக்கு இடத்தில் இருந்த குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.