உள்ளூர் செய்திகள்
தி.மு.க. கருத்து கேட்பு கூட்டம்
- ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. கருத்து கேட்பு கூட்டம் அரசடிப்பட்டியில் நடைபெற்றது
- சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அரசடிப்பட்டியில் நடைபெற்ற கழக உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கழக உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்டத் துணைச் செயலாளர் ஞான இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.