உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-07-06 09:39 GMT   |   Update On 2022-07-06 09:39 GMT
  • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 7-ந் தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
  • புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வைபொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வைபொறியாளர் சேகர் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 7-ந் தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

இதில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வைபொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News