உள்ளூர் செய்திகள்
- மன விரக்தியில் விபரீத முடிவு
- கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
புதுக்கோட்டை :
பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் சஞ்சய் (வயது22). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி சுந்தரி மற்றும் 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவிரக்தியான சஞ்சய் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.