உள்ளூர் செய்திகள்

331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

Published On 2023-08-22 13:27 IST   |   Update On 2023-08-22 13:27:00 IST
  • புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
  • கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுத்திறனாளிகளிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை ஆட்சியர்(பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்று த்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News