உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்

Published On 2023-08-15 12:13 IST   |   Update On 2023-08-15 12:13:00 IST
  • புதுக்கோட்டையில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
  • பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஐ.ஓ.பி மண்டல மேலாளர் சுந்தர கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News