உள்ளூர் செய்திகள்
- அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- அன்னதானம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலை ஓரமாக அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக திருவிழா விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை அமைக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கருடபகவான் வலம் வந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
இவ் விழாவில் 1000 கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புனித நீரானது வருகைதந்த பொதுமக்களின் மேல் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடை பெற்றது.