உள்ளூர் செய்திகள்

அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2022-10-09 06:40 GMT   |   Update On 2022-10-09 06:40 GMT
  • அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு நடந்தது
  • 251 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை

ஆலங்குடி ஐயப்பன் நகரில் எழுந்தருளி உள்ள அருள்பாலித்து வரும் ஐயப்பன் கோவிலில் புரட்டாசி கமிட்டி தாரர்களால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு பால், பன்னீர் உட்பட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்ட ன. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பதினெட்டு படிகளுக்கு இருபுறத்திலும் 251 சுமங்கலி பெண்கள் அமர்ந்து திரு விளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கு பின் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்கு மம் ஆகிய மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதான கமிட்டியாரால் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News