உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் 51 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2023-05-29 12:56 IST   |   Update On 2023-05-29 12:56:00 IST
  • கறம்பக்குடியில் 51 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
  • கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கரை முகமது அப்பாஸ் (வயது 39), வாணிப தெரு சேக் தாவூத் ஆகியோரிடமிருந்து 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News