உள்ளூர் செய்திகள்

எஸ்.ஐ. பணி எழுத்துத்தேர்வில் 3348 பேர் பங்கேற்பு

Published On 2022-06-26 07:21 GMT   |   Update On 2022-06-26 07:21 GMT
  • எஸ்.ஐ. பணி எழுத்துத்தேர்வில் 3348 பேர் பங்கேற்றனர்
  • புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

புதுக்கோட்டை :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தமிழக காவல் துறைக்கு 444 சப்- இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி,அரசமலையில் உள்ள தனியார் கல்லூரி ஆகிய 2 இடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

இதில் 2,879 ஆண்கள், 1,153 பெண்கள் என 4,032 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 684 பேர் பங்கேற்காததால் 3,348 பேர் தேர்வெழுதினர். அரசமலை தனியார் தேர்வு மையத்தில் மத்திய மண்டல ஜ.ஜி. சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார். 

Tags:    

Similar News