23 விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் கடன் உதவி
- 23 விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது
- ஆவின் கூட்டுறவுசொசை–யிட்டி இணைந்து நடத்தினர்.
புதுக்கோட்டை:
இந்தியாவின் மூன்றாவது பெரிய தேசிய வங்கியான பாங்க் ஆப் பரோடாவின் கறவை மாடுகள் விவசாயிகள் வாங்குவதற்கான கடன் உதவி திருவிழா நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியினை பாங்க் ஆப் பரோடா வங்கி துவக்கியுள்ளது.
இதனடிப்படையில் புதுக்கோட்டை பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் கூட்டுறவுசொசை–யிட்டி இணைந்து இவ்வி–ழாவை நடத்தினர்.
விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் கூட்டுறவு சொசையிட்டியின் மேலாளர் டாக்டர் ஈஸ்வரி கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இதில் 10 ஆவின் பால் சொசைட்டி–களின் தலைவர்மற்றும் செய–லாளர்கள்கலந்துக் கொண்டு தங்களது சந்தேக–ங்களை கேட்டறிந்தார்.
மேலும் புதுக்கோட்டை பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை மேலாளர் தனுசியா, அறந்தாங்கி கிளை மேலா–ளர் கௌரிசங்கர், கெப்பனாம்பட்டி வங்கி கிளை மேலாளர் செந்தில் மற்றும் விவசாய அதிகாரி ஐஸ்வர்யா ஆகியோர் இணைந்து 23 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்திற்கான கடன் நியமன ஆணைகளை வழங்கினர்.