உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது

Published On 2022-06-13 07:17 GMT   |   Update On 2022-06-13 07:17 GMT
  • சட்டவிரோதமாக மது விற்ற 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
  • மது பாட்டில்கள், பணத்தை பறிமுதல் செய்தனர்

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா இலுப்பூர் பகுதியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த

அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து ( வயது 72), வெண்ணாவல்குடியை சேர்ந்த குமார் (58), மேலகரும்பிரா ன்கோட்டையைச் சேர்ந்த குழந்தை மகன் விஜய் (42) ஆகியோரை பிடித்து, அவர்களிடமிருந்த மதுபாட்டில் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News