உள்ளூர் செய்திகள்

1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-04-13 13:10 IST   |   Update On 2023-04-13 13:10:00 IST
  • மக்கள் தொடர்பு முகாமில் வழங்கப்பட்டது
  • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வட்டம், பெருங்களுர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில், 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் அவர் கூறும்போது,தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பெருங்களுர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் 

Tags:    

Similar News