உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் 16 கடைகள் ஏலம்

Published On 2022-11-24 09:32 GMT   |   Update On 2022-11-24 09:32 GMT
  • கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் 16 கடைகள் ஏலம் விடப்பட்டது.
  • கட்டப்பட்டு 4 வருடம் கழித்து நடந்தது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நி லையம் கட்டப்பட்டு நான்கு வருடங்கள் ஆன நிலையில் திறக்கப்படா மல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் விரைவில் பேருந்து நிலையத்தை திறக்க கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று பேருந்து நிலையத்தி ல் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன. ஏல தாரர்கள் டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கபட்டனர்.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.3000 வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ.10,100 வரை ஏலம் விடப்பட்டன. ஏலமானது துவக்கத்தில் சலசலப்புடன் ஆரம்பித்து இறுதியில் சுமூகமாக நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், மற்றும் பல அரசு அதிகாரிகள் பங் கேற்றனர்.

மேலும் பேருந்து நிலையம் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tags:    

Similar News