உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் பா.ஜ.க.சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-09-22 09:43 GMT   |   Update On 2023-09-22 09:43 GMT
  • பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும்
  • தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

ஆலங்குடி, 

பிரதமர் மோடியின் 73 -வது பிறந்தநாள் விழாவை ஓராண்டு காலத்திற்கு கொண்டாட பா.ஜ.க. கட்சியினர் திட்டமிட்டு ள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோ ட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

வடகாடு முக்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜெகதீசன் கலந்து கொண்டு தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

பொது மக்களுக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை அக்கறையோடு வளர்க்குமாறு அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஓட்டுனர் அணி குமார், முத்துவேல் வாண்டையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News