உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம்

Published On 2023-09-22 09:35 GMT   |   Update On 2023-09-22 09:35 GMT
கறம்பக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன

கறம்பக்குடி,  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீனி கடை முக்கம், தென்னகர், சடையன் தெரு, பேருந்து நிலையம், நரங்கியப்பட்டு, உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

இதை தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்ப ட்டிருந்த விநாயகர் சிலை கள் தாரை தப்பட்டைகள் முழங்க கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றடைந்தன.

பின்னர் அங்கிருந்து சிலைகளின் ஒன்றுபட்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்துக்களின் ஒற்றுமை எழுச்சி ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை பாஜக மற்றும் இந்து முன்னணி மாநில மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்து பேசினார்கள்.

இந்த ஊர்வலம் சீனி கடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டார தெரு, கடைவீதி, பள்ளிவாசல் வீதி, பேருந்து நிலையம், கச்சேரி வீதி, புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று திருமணஞ்சேரி அக்கினி ஆற்றை அடைந்தது.

பின்னர் விழா குழுவினர்கள் பூஜைகள் செய்து ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தினால் கறம்பக்குடியில் நேற்று மாலை 3 மணி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

Tags:    

Similar News