உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

Published On 2022-07-10 14:31 IST   |   Update On 2022-07-10 14:31:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை தாங்கினார்.

பள்ளியின் உதவி ஆசிரியர்கள் அருளரசி, ரவிச்சந்திரன் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் ஆலங்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலாண்மை குழு கூட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இறுதியாக பள்ளி மேலாண்மை குழு மறுகூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News