உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

Published On 2023-01-28 09:55 GMT   |   Update On 2023-01-28 09:55 GMT
  • நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.
  • விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி:

சீர்காழி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.

விழாவிற்கு சீர்காழி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் சங்க செயலாளர் எஸ்.பி.நெடுஞ்செழியன், மூத்த வக்கீல்கள் செல்வராஜ், சந்திரமோகன், பாலாஜி, சிங்காரவேலன், ராம்குமார், பாலசுப்பிரமணியன், கார்த்திக் ராஜன், கார்த்தி ராதிகா, சுதா, தியாகராஜன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் எல்.எம்.சி பள்ளி மற்றும் பெஸ்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி ஆகியோர் வழங்கினார்.

விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்மு டிவில் வக்கீல்கள் சங்கத்தின் பொருளாளர் வக்கீல் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News