உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெருமகளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-29 09:46 GMT   |   Update On 2023-06-29 09:46 GMT
  • பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப வழங்க வேண்டும்.

பேராவூரணி:

பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் வி.பி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டுறவு சங்கத் தலைவர் சுப.வீரையன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சியில் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப வழங்க வேண்டும்.

பெருமகளூர் பேரூராட்சியில் திருக்குளம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதில், மேல் கரை மற்றும் வடகரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News