உள்ளூர் செய்திகள்

எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு: பல்லடத்தில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்

Published On 2024-11-25 12:29 IST   |   Update On 2024-11-25 12:29:00 IST
  • 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று 3-வது நாளாக தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இன்று விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், உண்ணாவிரத பந்தலில் கருப்புக் கொடி ஏற்றியும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது " சாலையோரமாக எண்ணெய் குழாய்களை கொண்டு செல்லும்படி போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எண்ணெய் குழாய் அமைப்பதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் எண்ணெய் குழாய்களை சாலையோரமாக பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News