உள்ளூர் செய்திகள்

கருவியை பயன்படுத்தி மாணவி மரம் ஏறிய காட்சி.

ஆலங்குளம் அருகே தென்னைமரம் ஏறும் கருவி குறித்து செயல்முறை விளக்கம்

Published On 2022-12-24 08:30 GMT   |   Update On 2022-12-24 08:30 GMT
  • கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள், தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
  • ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி விளக்கமளித்தார்.

ஆலங்குளம்:

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், ஆலங்குளம் அருகே உள்ள அச்சங்குட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.

இதில் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுருநாதன் வழிகாட்டுதலின் படி மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா. கீர்த்தனா. லக்சயா ஆகிேயார் தென்னை மரம் ஏறும் கருவியின் பயன்பாட்டையும், அதன் முக்கியதுவத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதன்மூலம் தென்னைமரம் ஏறும் செலவுகளைக் குறைப்பதோடு, விரைவாகவும் பாதுகாப்பாகவும் மரம் ஏறலாம் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி செயல்பாட்டை விளக்கினார். மேலும் இவர்கள் 2½ மாதம் ஆலங்குளம் வட்டாரத்தில் முகாமிட்டு வேளாண் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News