உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ்கள் டைமிங் பிரச்சினையால் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

ஒட்டன்சத்திரத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி இயங்கும் தனியார் பஸ்கள்

Published On 2023-10-20 05:31 GMT   |   Update On 2023-10-20 05:31 GMT
  • தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்காததால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
  • பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் பல்வேறு கிராமங்களுக்கு தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்து வருகின்ற னர்.

கடந்த சில மாதங்களாக ஒரு சில தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை இயக்காமல் மற்ற தனியார் பஸ்கள் இயங்கும் நேரத்தில் பஸ்களை இயக்குவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தங்கள் ஊருக்கு செல்வதாக பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.

சில தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்கள், வட்டார மற்றும் மண்டல போக்கு வரத்து அலுவலகங்கள் ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் முறையிட்டனர். பஸ்கள் முறையாக நேரத்துக்கு இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி தடை ஆணை பெற்றனர்.

ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து தனியார் பஸ்களின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News