உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம்

Published On 2022-06-10 08:53 GMT   |   Update On 2022-06-10 09:01 GMT
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாமக்கல்:

நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களும் கான்கிரீட் வீடுகள் கட்டுதல் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் 2016 -2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் 2021 - 2022 -ன் கீழ் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் அவர்கள் வீட்டிற்காக அரசினால் வழங்கப்படும். தொகை ரூ.2.277,290- குறித்தும் வீடுகள் அளவீடுகள் துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மூட்டைகள். இரும்பு கம்பிகள் குறித்தும் பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடமிருந்து 2021 2022ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட 3213 கையேடுகள் வரப்பெற்றுள்ளது.

பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காதப்பள்ளி, எர்ணாபுரம், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு கையேடுகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வழங்கினார்.

வரப்பெற்ற கையேடுகள் ஒன்றியங்களில் வட்டாரங்களுக்கு உள்ள பிரித்து ஊராட்சிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இக்கையேட்டின் மூலம் பயனாளிகள் தங்கள் வீடு கட்டுவது குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும் பயனாளிகளுக்கும் இக்கையேடு இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் மிகவும் பயனள்ளதாக இருக்கும்.

Tags:    

Similar News