பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.
- பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். இன்று காலை திருச்சி வரும் அவர், திருச்சி விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
அதன்பின் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் முடிவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் மோடி கலந்த கொள்ளும் திருச்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருநது புறப்பட இருக்கிறார்.