உள்ளூர் செய்திகள்

திருவையாறு பகுதியில் வருகிற 21-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2023-01-19 09:42 GMT   |   Update On 2023-01-19 09:42 GMT
  • திருவையாறு மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருவையாறு:

திருவையாறு மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திரு ப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யா ணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News