உள்ளூர் செய்திகள்
- வீராமலையில் உள்ள கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை.
- கோழி பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள நெடுங்கல்லை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 36). ராணுவ வீரர். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வீராமலையில் உள்ளது. அந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை. இந்த நிலையில் நேற்று முனதினம் அந்த பண்ணைக்கு யாரோ தீ வைத்து சென்றனர்.
இதில் அந்த பண்ணை முழுமையாக எரிந்தது. இது குறித்து விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள சிவக்குமார் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.