சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் மீது போக்சோ வழக்கு
- சாக்லெட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
- சிறுமிக்கு பாலியல் தொந்த–ரவு கொடுத்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி பஸ் நிலையம் அருகே சத்திரம்தெருவில் பாலசுப்பிரமணி (75) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்த–ரவு கொடுத்துள்ளார். உடனே நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் போலீசார் பாலசுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
தருமபுரி நகரில் 10 வயது சிறுமிக்கு 75 வயது முதி யவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.